Friday, November 13, 2009
ஒரு மழைக்காலத்தின் மாலைப்பொழுது மழையில் நனைந்துகொண்டே வந்த என்னை திட்டினாய்.இப்படி நனைஞ்சுட்டு வர்றியே காய்ச்சல் வந்தா என்ன பண்ணுறது என்று திட்டிக்கொண்டே தலையை துவட்டி விட்டாய்.ஆனாலும் நீ பயந்தது போலவே காய்ச்சலும் வந்தது.இரவெல்லாம் என்னருகில் நீ இருந்து என்னை கவனித்துகொண்டாய்.ஒரு தாயின் அன்பை மனைவி உன்னிடம் நான் கண்ட நேரம் அது.மறுநாள் காலை விழிக்கும்பொழுது புன்னகைபூவாய் உன் முகம் என் எதிரில் காய்ச்சல் விட்டுவிட்டடதா என்றாய்.உன் மடி தந்த சுகமும்,உன் கைகள் என்னை சுற்றியே இருந்ததும் நினைவிற்க்கு வந்தது.நேற்று நீ இருந்த மாதிரி தினமும் இருந்தால் எனக்கு தினமும் காய்ச்சல் வந்தாலும் கவலை பட மாட்டேன் என்றேன்.ஒரு கணம் திகைத்த நீ எப்போதும் செல்லமாய் திட்டுவாயே பொறுக்கி என்று அதை கூறினாய்.கல்யாணத்திற்கு பிறகு நீ அந்த வார்த்தையை கூற மாட்டேன் என்றாய்.பந்தயமும் கட்டினாய்.சொல்லிவிட்டால் நான் கேட்டது முத்தம்.நீயும் கூறி விட்டாய்.முத்தம் தா என்றேன்.இன்னொரு தடவை இப்படி பண்ணாத உனக்கு உடம்பு சரி இல்லேன்னா என் உயிர் என்னிடம் இல்லை என்று கூறியபடியே முத்தம் தந்தாய்.அதே கணம் உன் கண்களில் இருந்து கண்ணீர் என் கைகளில் விழுந்தது.உன் முத்தத்தை விட நீ சிந்திய கண்ணீரில் தெரிந்தது உன் காதல்.வார்த்தைகளற்ற உலகில் நான்.ஒரு ஓவியமாய் என் மடியில் நீ.இந்த கணம் இப்படியே நின்று விடாதா?.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment